இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் அதிரடி மாற்றம் - Jaffna-muslim-sample

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, October 14, 2016

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தில் அதிரடி மாற்றம்

இலங்கையில் குடிவரவு மற்றும் குடியகல்வு கொள்கை சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


சட்ட விரோத குடியேற்றவாசிகள் தொடர்பாக நடவடிக்கையெடுக்கும் வகையிலேயே இந்த மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


ஊடகத்துறை மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான பதில் அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன இதனை தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான பிரச்சினை உள்ளது. இதனால் பாதுகாப்பு அமைச்சு , குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன இணைந்து இது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது.


இதன்படி விரையில் குடிவரவு , குடியகல்வு தொடர்பான புதிய கொள்கைகள் தயாரிக்கப்படவுள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.

Post Bottom Ad

Responsive Ads Here

Pages